வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்ட மையம் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே உணவு இடைவெளியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலகில் உள்ள சுமார் 75 அலுவலக உதவியாளர் உள்ளிட்ட அடிப்படை பணியாளர்கள், காலி பணியிடங்களை பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனம் மூலம் உடனே நிரப்பப்பட வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில் புதிதாக பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு வழங்கபடாதவர்கள் தகுதியான பருவ முடிக்கவும், ஆண்டு ஊதிய உயர்வு பெறவும், அரசு அடிப்படை பயிற்சி மற்றும் நில அளவை பயிற்சிகளை உடனே இணையவழி பயிற்சியாக வழங்கிட வேண்டும்.
2021 ஆம் ஆண்டு வட்டாட்சியர் பட்டியில் காலதாமதமின்றி வெளியிடுதல் அல்லது தற்காலிக வட்டாட்சியர் பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினர்.