கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகததில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது-
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மருத்துவர்கள் வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை அலுவலர்களுடன் கொரோன தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
இந்த கூட்டத்திற்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ,மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ,உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகளுக்கு கொரோன வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு அரசு சார்பில் என்னென்ன உங்களுக்கு தேவை என்று அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்தனர்
அதேபோல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிகழ்ச்சியில் பேசினார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக் குறையினால் கொரோன நோயாளிகள் யாரும் இறக்கவில்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்போது நடைபெறும் கூட்டம் ஆலோசனை கூட்டம் அல்ல மன அழுத்தத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளை உற்சாகப்படுத்த இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது எனவே மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு மற்ற துறையினரும் துணையாக பணியாற்ற வேண்டும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பற்றி தேவையில்லாமல் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறினார்