9A நத்தம்பண்ணை ஊராட்சியில் நடந்த சமுதாய திறன் பள்ளி பயிற்சி வகுப்புகள்
நத்தம்பண்ணை ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில் சமுதாய திறன் பள்ளி பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது
HIGHLIGHTS
9A நத்தம்பண்ணை ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில் சமுதாய திறன் பள்ளி பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது
புதுக்கோட்டை 9A நத்தம்பண்ணை ஊராட்சியில் கிராமப்புற மகளிர் மேம்பாட்டை வலியுறுத்தும் வகையில் சமுதாய திறன் பள்ளி பயிற்சி வகுப்புகள் துவக்க விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஏவிஎம் பாபு மாவட்ட திட்ட செயல்அலுவலர் ஜெய்கணேஷ் தலைமை வகித்தார்.இளம் வல்லுனர் வேதா முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் அனிதா அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பில் கிராமப்புற மகளிர் மேம்பாடு திட்டத்தின் கீழ் சமுதாய திறன் பள்ளி வகுப்புகள் மூலம் பெண்களுக்கு வீட்டில் இருந்தபடி சிறு தொழில் புரிவதற்கான பயிற்சி வகுப்புகள் மசாலா பொருட்கள் வடாகம் வத்தல் மஞ்சள் பொடி மிளகாய் பொடி சாம்பார் பொடி கரம் மசாலா மிளகுத்தூள் ஆகியவை தயாரித்து வணிக ரீதியாக விற்பனைக்கு கொண்டு வருவதற்கான வழிமுறைகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டது. முன்னதாக திட்டத்தின் சிறப்புகள் குறித்து மாவட்ட செயல் அலுவலர் ஜெய்கணேஷ் விளக்கமாக பேசினார்.
இந்தத் திட்டத்தில் பங்கேற்பதால் உண்டாகும் பலன்களை மற்றும் பெண்களுக்கான தொழில் புரிவதற்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் முன்னேற்றத்திற்கான சிறப்புகளைப் பற்றி ஊராட்சி மன்ற தலைவர் ஏவிஎம்பாபு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து பயிற்சி வகுப்பில் பங்கேற்ற பெண்களுக்கு சமையல் உபகரணங்களை ஊராட்சி மன்றத்தலைவர் ஏவிஎம் பாபு மற்றும் மாவட்ட செயல் அலுவலர் ஜெய்கணேஷ் ஆகியோர் வழங்கினார்கள் இதில் 70-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்