/* */

முழுநேர அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும்: அங்கன்வாடி ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

முழுநேர அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது

HIGHLIGHTS

முழுநேர அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும்: அங்கன்வாடி ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
X

அங்கன்வாடி மாநாட்டில் பேசுகிறார்  சிஐடி மாநில தலைவர் அ. சௌந்தரராஜன்

அங்கன்வாடி ஊழியர்களை முழுநேர அரசு ஊழிராக அறிவித்து குறைந்தபட்சம் ஊழியர்களுக்கு ரூ.21,000, உதவியாளர்களுக்கு ரூ.18,000 ஊதியம் வழங்க வேண்டுமென அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில மாநாடு வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் 6-ஆவது மாநில மாநாட்டை முன்னிட்டு பேரணி-பொதுக்கூட்டம் மற்றும் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. புதுக்கோட்டை லேணா திருமண மண்டபத்தில் தோழர் ஸ்டெல்லா நினைவரங்கில் நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டிற்கு மாநில தலைவர் எஸ்.ரத்னமாலா தலைமை வகித்தார். மாநில செயலாளர் பி.சித்திரைச்செல்வி அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.

மாநாட்டை தொடங்கி வைத்து சிஐடியு மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு உரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் டி.டெய்சி, பொருளாளர் எஸ்.தேவமணி ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். தீர்மானங்களை மாநில நிர்வாகிகள் முன்மொழிந்தனர். வரவேற்புக்குழுத் தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., சிஐடியு மாநில செயலாளர் கே.சி.கோபிகுமார், அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் எம்.அன்பரசு, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் மாலதி, சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் மலர்விழி ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர்.

மாநாட்டில் கலந்துகொண்டு சிஐடியு மாநிலத் தலைவர் அ.சௌந்தரராஜன் சிறப்புரையாற்றினார். மாநாட்டை நிறைவுசெய்து சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஏ.ஆர்.சிந்து உரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் எஸ்.பத்மா நன்றி கூறினார். மாநாட்டில் 600-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

அங்கன்வாடி ஊழியர்களை முழுநேர அரசு ஊழிராக அறிவித்து குறைந்தபட்சம் ஊழியர்களுக்கு ரூ.21,000, உதவியாளர்களுக்கு ரூ.18,000 ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ஊழியர்களுக்கு ரூ.10,000, உதவியாளர்களுக்கு ரூ.8,000 வழங்க வேண்டும். 25 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்துவரும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு அரசு விதிகளின்படி 10 வருடத்திற்கு ஒருமுறை பதவி உயர்வு வழங்க வேண்டும். 26 வருடம் பணிமுடித்த ஊழியர்களுக்கு மேற்பார்வையாளர்களுக்கு வழங்கும் ஊதியம் வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 15 விழுக்காடு அங்கன்வாடி மையங்களில் பணியாளர், உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. ஒரு பணியாளர் இரண்டு மையங்களில் பணிசெய்வது இரண்டு மையங்களையும் பாதிக்கும். எனவே, காலிப்பணிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். விலைவாசி கடுமையான உயர்ந்துவரும் நிலையில் ஒரு குழந்தையின் உணவூட்டு செலவீனம் 5 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக அரசு அறிவித்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்கவில்லை. எனவே, மத்திய அரசு வழங்கும் ஊதியத்தை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.

5 வருடம் பணிமுடித்த தகுதியுள்ள உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களை திட்டப்பணிகள் தவிர மற்ற பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது. அங்கன்வாடி ஊழியர்களை எல்கேஜி, யுகேஜி வருப்புகளுக்கு ஆசிரியர்களாக நியமித்து இடைநிலை ஆசிரியருக்கான ஊதியத்தை வழங்க வேண்டும். ஓய்வுபெறும்போது ஊழியருக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் பணிக்கொடையாக வழங்க வேண்டும். எரிவாயு சிலிண்டருக்கு உண்டான மொத்த செலவுத் தொகையையும் அரசே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.



Updated On: 22 Aug 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...