சாலை அமைக்கும் இடத்தின் குறுக்கே 20 அடி வரத்து வாரி:சாலைகளை இணைப்பதில் சிக்கல்
இதனால் இந்த சாலை வழியாக செல்லும் மாணவ மாணவிகள் முதியவர்கள் இந்த சாலையின் குறுக்கே உள்ள பள்ளத்தில் விழுகின்றனர்
HIGHLIGHTS
கறம்பக்குடி கச்சேரி வீதியில் (நெய்வேலி ரோடு) சிமிண்ட் பிளாக் சாலை அமைக்கும் இடத்தில் 20 அடியில் வரத்து வாரின் குறுக்கே பாலம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கச்சேரி வீதியில் (நெய்வேலி ரோடு) சிமிண்ட் பிளாக் சாலை அமைக்கும் இடத்தில் 20 அடியில் வரத்து வாரி வருவதால் சாலையை இணைக்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கறம்பக்குடி கச்சேரி வீதியில் (நெய்வேலி ரோடு) சிமிண்ட் கல்சாலை அமைக்கும் நடந்து வந்தது.
இந்நிலையில் இந்த சாலையின் குறுக்கே 20 அடியில் வாரி வருவதால் சாலையை இணைக்க முடியாமல் பணி முடிவடைந்துள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் மாணவ மாணவிகள் முதியவர்கள் இந்த சாலையின் குறுக்கே உள்ள பள்ளத்தில் விழுந்து 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் மேலும் இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
எனவே, தமிழக அரசு மாவட்ட நிர்வாகமும் கறம்பக்குடி கச்சேரி வீதியில் (நெய்வேலி ரோடு) சிமிண்ட் கல்சாலை அமைக்கும் சாலையின் குறுக்கே இருக்கும் 20 அடி வரத்து வாரியில் பாலம் கட்டி கொடுத்து சாலையை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.