/* */

பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் செயின் பறிப்பு

பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் செயின் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் செயின் பறிப்பு
X

பெரம்பலூரில் கொள்ளையர்களிடம் நகையை பறி கொடுத்த கலையரசி

பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமத்தை சேர்ந்தவர் கலையரசி வயது - 41 இவரது கணவர் அசோகன் -இவர்கள் தற்போது பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள அருணசல கவுண்டர் நகர், பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

கலையரசி இன்று வேலை நிமித்தமாக தனது இருசக்கர வாகனத்தில் எசனை கிராமத்திற்குச் சென்று விட்டு, மாலையில் மீண்டும் பெரம்பலூருக்கு புறவழி சாலையில் வந்து கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் கலையரசி கழுத்தில் இருந்த 6 பவுன் தங்கச்சங்கிலி பறித்துள்ளார்.

இதில் சங்கிலியை கலையரசி கையில் பிடித்துக் கொண்டதால், செயின் உடன் இருந்த ஒரு பவுன் எடை கொண்ட திருமாங்கல்யம் தவிர மற்ற 5 பவுன் தங்க செயினை பறிபோனது.

இச்சம்பவம் குறித்து கலையரசி பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது குறித்து அப்பகுதியில் உள்ள -சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு தேடி வருகின்றனர்.

Updated On: 7 Oct 2021 3:36 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    AI-ன் வளர்ச்சி தேடுபொறிகளை காணாமல் ஆக்குமா..? பிச்சை என்ன சொல்கிறார்?
  2. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  3. வீடியோ
    😎SalmanKhan-உடன் இணையும் AR Murugadoss !சம்பவம் Loading🔥!#salmankhan...
  4. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  5. கும்மிடிப்பூண்டி
    தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!
  6. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  7. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  8. லைஃப்ஸ்டைல்
    இனிய காதல் மேற்கோள்கள்!
  9. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!