/* */

தண்ணீர் லாரி மோதி ஒருவர் பலி; பெரம்பலூரில் கிராம மக்கள் சாலை மறியல்

தண்ணீர் லாரி மோதி ஒருவர் பலியானதால், அரியலூர்- பெரம்பலூர் சாலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தண்ணீர் லாரி மோதி ஒருவர் பலி; பெரம்பலூரில் கிராம மக்கள் சாலை மறியல்
X

பெரம்பலூர் - அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியல் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

பெரம்பலூர் அருகே உள்ள கே.எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(35 ). இவர் தனது இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக கே.எறையூர் பிரிவு சாலைக்கு வரும் பொழுது முன்னே சென்ற தண்ணி லாரியை முந்தினார. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதைத்தொடர்ந்து, கே.எறையூர் சேர்ந்த கிராம பொதுமக்கள், கிராமத்தில் அதிகமான கிரஷர் மற்றும் குவாரிகள் உள்ளதால் அதிகமான லாரிகள் வருகின்றன. இந்த லாரிகள் அதிவேகமாக வருவதன் காரணமாக இந்த விபத்து நடந்துள்ளது. மேகம் கிராம சாலையை அகலப்படுத்தி வேகத்தடை தேவையான இடத்தில் அமைக்க வேண்டும் என தெரிவித்து கே.எறையூர் பிரிவு சாலையான பெரம்பலூர் - அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தையடுத்து பொதுமக்கள் சாலை மரியலை கைவிட்டனர்.

Updated On: 29 July 2021 8:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்