பெரம்பலூர் எம்.ஆர்.எப் தொழிற்சாலையின் தொழிற்சங்க துவக்கவிழா
பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில், பெரம்பலூர் எம்ஆர்எப் தொழிற்சாலையின் தொழிற்சங்க துவக்கவிழா இன்று நடைபெற்றது'
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில், பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள மாவட்ட திமுக அலுவக கூட்ட அரங்கில் பெரம்பலூர் எம்ஆர்எப் தொழிற்சாலையின் தொழிற்சங்க துவக்க விழா இன்று நடைபெற்றது,
திமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் புதிதாக தொடங்கப்பட்ட பெரம்பலூர் எம்ஆர்எப் தொழிற்சாலையின் தொழிற்சங்க விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் பற்றி அனைவருக்கும் எடுத்துரைக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்
இந்நிகழ்சியில் தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் ரெங்க சாமி, கவுன்சில் தலைவர் கே.கே. குமார், தொழிற் சங்க தலைவர் ராஜகாந்தம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்சியில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர், பிரபாகரன், திமுக மாவட்ட துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, நல்லதம்பி, மதியழகன், ஒன்றிய பொறுப்பாளர்கள் ஜெகதீசன், சோமு மதியழகன் மற்றும் எம்ஆர்எப் தொழிற்சாலை தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.