Begin typing your search above and press return to search.
காக்கி உடையின் கருணை உள்ளம்
பெரம்பலூரில் சாலை விபத்தில் இறந்த நாய்க்குட்டி உடலை அப்புறப்படுத்திய காவலரை அனைவரும் பாராட்டினார்கள்.
HIGHLIGHTS
சாலை விபத்தில் அடையாளம் தெரியாத மனிதன் இறந்து கிடந்தாலே கண்டும் காணாமல் போகும் சூழலில் விபத்தில் உயிரிழந்த நாய்க்குட்டியின் உடல் சிதைவடைவதை பார்த்து மனமிறங்கி அதன் உடலை சாலையில் தலைமை காவலர் முரளிதரன் என்பவர் அகற்றினார்.பெரம்பலூர் - அரியலூர் சாலை விபத்தில் உடல் சிதைந்து இரத்தமும் சதையுமாக கிடந்த நாய்க்குட்டியின் உடலை பார்த்து அவ்வழியே சென்ற அனைவரும் கடந்து போன நிலையில் தானே கைப்பட அந்த நாய்க்குட்டியின் உடலை சாலையில் இருந்து தலைமை காவலர் முரளிதரன் என்பவர் அப்புறப்படுத்தினார். அவரது மனித நேயமிக்க சகிப்புத்தன்மையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.