/* */

வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா நேரில் ஆய்வு.

HIGHLIGHTS

வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
X

வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீ வெங்கடபிரியா நேரில் ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீ வெங்கடபிரியா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் மூலம் ஒருங்கிணைந்த பள்ளி கட்டிடங்கள் மேம்படுத்தும் திட்டம், தேசிய கிராம சுய வேலைவாய்ப்பு திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் தொகுதி மேம்பாட்டு திட்டம், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம், நபார்டு திட்டத்தின் கீழ் சாலைகள் மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகள், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டம், மூலதன நிதி திட்டம், பசுமை வீடுகள் கட்டும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் நுண்ணுயிர் உரமாக்கும் மையம், மாநில நிதிக்குழு மானியத்தின் மூலம் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், ஆய்வின்போது ஊராட்சி தணிக்கை கோப்புகள், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட பணிகள் தொடர்பான பதிவேடுகள், பசுமை வீடுகள் திட்டம் தொடர்பான பதிவேடுகள் பொது நிதி வளர்ச்சி பணிகள் தொடர்பான பதிவேடுகள் மற்றும் பல்வேறு அலுவலக கோப்புகளை பார்வையிட்டார்கள்.

முன்னதாக வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் மரக்கன்று நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வேப்பந்தட்டை ஒன்றிய குழுத்தலைவர் ராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பணிகள்) நாராயணன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ரங்கராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளிதரன், ராஜேந்திரன், உதவி பொறியாளர் ஆனந்த், ஒன்றிய பொருளாளர் சந்திரசேகர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 15 Sep 2021 2:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை