Begin typing your search above and press return to search.
பெரம்பலூரில் புத்தாண்டு நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
பெரம்பலூரில் புத்தாண்டு நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 2022 புத்தாண்டு பிறப்பையொட்டி கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளது. பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள புனித பனிமய மாதா ஆலயத்தில், சிறப்பு திருப்பலியும், அதனை தொடர்ந்து கூட்டுப் பிராத்தனையும் நடைபெற்றது.
தொடர்ந்து பெரம்பலூர் நகர்ப்புற பகுதிகளில் பல்வேறு இடங்களில் சிறுவர்கள், பெண்கள், உள்ளிட்டோர் மகிழ்ச்சி பொங்க கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர். மேலும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இதேபோல் பெரம்பலூர் நகர்ப்புற பகுதிகளிலும், மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தேவாலயங்களில் சிறப்பு திருப்பலியும், புத்தாண்டு கொண்டாட்டங்களும் நடைபெற்றது.