/* */

பெரம்பலூர் அருகே போஸ்ட் மாஸ்டர் பணமோசடி : பொதுமக்கள் சிறைபிடிப்பு

30 லட்சம் மோசடி செய்த கோனேரிபாளையம் போஸ்ட் மாஸ்டரை பொதுமக்கள் சிறைபிடித்தனர். போலீசார், தபால் துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே  போஸ்ட் மாஸ்டர் பணமோசடி : பொதுமக்கள் சிறைபிடிப்பு
X

கோனேரிபாளையம் போஸ்ட் ஆபீசை முற்றுகை இட்ட பொதுமக்கள். 

30 லட்சம் மோசடி செய்த கோனேரிபாளையம் போஸ்ட் மாஸ்டரை பொதுமக்கள் சிறைபிடிப்பு போலீசார் தபால் துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர்.

பெரம்பலூர் அடுத்துள்ள கோனேரிபாளையம் கிராமத்தில் இயங்கி வரும் தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்து வருபவர் சின்னதுரை, இவர் அதே ஊரில் கடந்த நான்காண்டுகளாக போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் அங்குள்ள பொதுமக்களிடம் போஸ்ட் ஆபீஸ் உள்ள R.D மற்றும் நிரந்தர வைப்புதொகை, சேமிப்பு கணக்கு ஆகியவற்றுக்கான பணத் தொகையை பெற்றுக்கொண்டு கணக்கில் வரவு வைக்காமல் இருந்துள்ளார். மேலும் கட்டிய பணத்துக்கு ரசீது கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து யாரும் பொதுமக்கள் கண்டு கொள்ளாததால் அவர் தன்னுடைய பண மோசடியை தொடர்ந்து செய்து வந்துள்ளார்.

மக்கள் R.D.மற்றும் வைப்பு தொகையில் பணம் இல்லாதது குறித்து, அதிகாரிகள் நேரில் பார்வையிட்டபோது மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கோனேரி பாளையம் போஸ்ட் மாஸ்டர் சின்னதுரை பொதுமக்கள் பணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தெரிந்த கிராம பொதுமக்கள் சம்பந்தப்பட்ட சின்னதுரையை சிறை பிடித்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர், தபால் துறை அலுவலர்கள் நேரில் வந்து சின்னதுரை இடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 30 லட்சம் ரூபாய்க்கு மேல் சின்னதுரை மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் விசாரணையில் இவர் கையாடல் செய்த தொகை எவ்வளவு ? இதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 21 Jun 2021 3:02 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...