புதிய வழித்தடத்தில் அரசுப்பேருந்தை 5 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற எம்.எல்.ஏ
பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அரும்பாவூர், பூலாம்பாடி வழியாக ஆத்தூருக்கு புதிய வழித்தடத்தில் அரசு பேருந்தை துவக்கி வைத்து 5 கி.மீ. தூரம் பேருந்தை ஓட்டிச்சென்றார் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன்.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு, அரும்பாவூர், பூலாம்பாடி வழியாக பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ்.நல்லதம்பி, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ஜெகதீசன் மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் ரவிச்சந்திரன், சேகர் ஆகியோர், கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா. எம்.பி.யிடம் பொதுமக்கள் கோரிக்கை குறித்து தெரிவித்தனர்.
போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் பேசிய கழக துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா. எம்.பி., அந்த வழித்தடத்தில் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறியதின் பேரில், தினமும் 3 முறை பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து ,சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு, வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம், அரும்பாவூர், பூலாம்பாடி,கள்ளப்பட்டி வீரகனூர் வழியாக ஆத்தூருக்கு செல்லும் பேருந்தை பூலாம்பாடியில் துவக்கி வைத்து, கள்ளப்பட்டி வரை சுமார் 5 கி.மீ தூரம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் அரசுப் பேருந்தை ஓட்டிச்சென்றார். நிகழ்ச்சியில் பொதுமக்கள் திமுக கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.