Begin typing your search above and press return to search.
பெரம்பலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு
பெரம்பலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்போது, தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலை கருத்தில் கொண்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் திங்கட்கிழமைதோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகின்றன. மேலும், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் உட்பட அனைத்து குறை தீர்க்கும் நாள் கூட்டங்களும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.