மருத்துவமனையில் எம்.எல்.ஏ. பிரபாகரன் ஆய்வு
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சையினை சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆய்வு செய்தா
HIGHLIGHTS
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மட்டுமின்றி பிற நோய் பிரிவில் உள்ளவர்களுக்கும் வழங்கப்படும். சிகிச்சைகளை பார்வையிட்ட எம்.எல்.ஏ பிரபாகரன் மருத்துவமனையில் அடிப்படை தேவைகளான படுக்கை வசதி, உணவு, ஆக்சிஜன், குடிநீர், கழிவறை, ஆகியவற்றில் குறைபாடுகள் இல்லா வண்ணம் மருத்துவமனை செயல்பட வேண்டும் எனவும்,
தமிழக அரசு வழங்கியுள்ள வெண்டிலேட்டர்கள் (30) , தேசிய சுகாதார பணிகள், நபார்டு மற்றும் பொது சுகாதாரத்துறை இணைந்து ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பதி செய்யும் புதிய கருவியை இன்னும் பத்து நாட்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடந்து வரும் பணிகளையும் பார்வையிட்டார்..
தற்போது மாவட்டத்தில் கிராம புறங்களில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு மற்றும் முக கவசம் அணிவதை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.