/* */

காந்திஜியின் பிறந்த நாள்: நம்மால் முடியும் நண்பர்களால் மரக்கன்றுகள் நடவு

இதையொட்டி அங்கன்வாடி வளாகம், ஏரிக்கரை, சாலையோரம் போன்ற இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன

HIGHLIGHTS

காந்திஜியின் பிறந்த நாள்: நம்மால் முடியும் நண்பர்களால் மரக்கன்றுகள் நடவு
X

காந்தியின் 153 வது பிறந்த நாள் விழாவில் நம்மால் முடியும் நண்பர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டது.

மகாத்மா காந்தியின் 153 -ஆவது பிறந்த நாள் விழாவானது நாடெங்கும் கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பெரம்பலூர் மாவட்டத்தில் பாடாலூர், இரூர்,ஆலத்தூர்கேட் உள்பட ஆலத்தூர் வட்டாரப் பகுதிகளில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, ஆலத்தூர் வட்டம், நாட்டார்மங்கலம் கிராமத்தில் நம்மால் முடியும் நண்பர்கள் குழு சார்பாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம் முன்பு காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது.இதனையடுத்து, அங்கன்வாடி வளாகம், ஏரிக்கரை, சாலையோரம் போன்ற இடங்களில் மரக்கன்றுகள் நட்டுவிக்கப்பட்டது. மேலும் பள்ளி வளாகம், கோயில்கள், சாலையோர பகுதிகளில் உள்ள ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகளை அகற்றி தூய்மை செய்யப்பட்டன. ஏற்பாடுகளை நம்மால் முடியும் நண்பர்கள் குழு அமைப்பினர் செய்திருந்தனர்.

Updated On: 2 Oct 2021 6:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு