/* */

நிறைமாத கர்ப்பிணி பெண் மாயம்: காவல்நிலையத்தில் தாய் புகார்

பத்மாவின் செல்போனையும் காணவில்லை, பின்னர் பத்மாவையும் காணவில்லை பெரும் பரபரப்பு

HIGHLIGHTS

நிறைமாத கர்ப்பிணி பெண் மாயம்: காவல்நிலையத்தில் தாய் புகார்
X

கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, ஆலத்தூரை சேர்ந்தவர் ராஜ்குமார். டிரைவர். இவரது மனைவி பத்மா (வயது 28). நிறைமாத கர்ப்பிணியான பத்மா தற்போது ஆலத்தூர் தெற்கு தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 4-ந்தேதி பத்மாவை, அவரது தாய் கோவிந்தம்மாள் பரிசோதனைக்காக பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். பின்னர் பரிசோதனை முடிந்து மாலையில் ஊருக்கு செல்வதற்காக அவர்கள் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது பத்மாவின் செல்போனை காணவில்லை. இதனால் செல்போனை கோவிந்தம்மாள் தேடிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் பத்மாவையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கோவிந்தம்மாள், பத்மாவை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் கோவிந்தம்மாள் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாணை நடத்தி பத்மாவை தேடி வருகின்றனர். காணாமல்போன நிறைமாத கர்ப்பிணி பத்மாவுக்கு நேற்று முன்தினம் தான் பிரசவ தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 7 Aug 2021 10:55 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...