Begin typing your search above and press return to search.
பெரம்பலூர் பகுதிகளில் பறிமுதல் செய்த வெடிப்பொருட்கள்; செயலிழக்கச் செய்த போலீசார்
பெரம்பலூர் அருகே பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிப்பொருட்களை மாவட்ட காவல்துறையினர் செயலிழக்கச் செய்தனர்.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்டம்,அரும்பாவூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட நைட்ரேட் மிக்சர்,டெட்டர்னேட்டர், ஜெல்ஸ்டிக் உட்பட்ட வெடிபொருட்களை அழித்து செயலிழப்பு செய்ய மாவட்ட போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர்.
இதனையடுத்து, வெங்கலம் என்ற பகுதியில் வெடித்தும், அழித்தும் பெரம்பலூர் காவல் துறையினரால் செயலிழக்கம் செய்யப்பட்டது.
அப்போது வெடிபொருள் கண்டுபிடிப்பு மற்றும் செயலிழக்க பிரிவினர், வருவாய்துறையினர், மருத்துவ குழுவினர், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர், 108 ஆம்புலன்ஸ் குழுவினர் மற்றும் காவல்துறை ஆகியோர் உடன் இருந்தனர்.