பெரம்பலூரில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா
பெரம்பலூரில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் பிறந்த நாள் விழா கோலாகலமாக நடடைபெற்றது.
HIGHLIGHTS
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் பிறந்த நாள் விழா, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தேமுதிக கட்சி சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,பெரம்பலூர் மாவட்டம் ,அம்மாபாளையம் கிராமத்தில் இன்று தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாவட்ட செயலாளர் துரை காமராஜ் தலைமையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் ஒன்றியக் கவுன்சிலர் பாப்பாத்தி செல்வகுமார் , மற்றும் மாவட்ட பொறியாளர் அணி துணைச் செயலாளர் ஆனந்தராஜ் ஆகியோர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வரும் பயனாளிகள் அமர்வதற்காக நாற்காலி, மேஜை, மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கும், முதியோர்களுக்கு பிரட், முகக் கவசங்கள் வழங்கினார்கள். அரசு மருத்துவமனை சுற்றி ஐந்து தென்னை மரக் கன்று நட்டு வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு பென்சில், நோட்டு புத்தகம், வழங்கப்பட்டன.இறுதியாக அம்மாபாளையம் பேருந்து நிலையத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி னர்.
அங்கு இருந்த மக்களுக்கு முககவசம் வழங்கி, கொரோனோ தொற்று மூன்றாவது 'அலையில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் கண்ணுசாமி, திருப்பதிசாமி, வேல்முருகன், சந்திரசேகர் ,சத்தியமூர்த்தி, அருண்குமார் , குணசுந்தரி, நல்லுசாமி , ரமேஷ் ,கபாலி, ஈஸ்வரன் , பிரபாகரன் , பழனி முருகன் ,.செந்தில்குமார், மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..