100 சதவீதம் வாக்குப்பதிவு- கோலமிட்டு விழிப்புணர்வு
2021 சட்டமன்ற தேர்தலில் பெரம்பலூரில் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்திட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 ஐ முன்னிட்டு வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் வெங்கடபிரியா தலைமையில் இன்று காலை பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.அதனையடுத்து மகளிர் சுய உதவிக்குழுவினர் வரைந்த வாக்காளர் விழிப்புணர்வு வண்ணக்கோலத்தினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், கோலமிட்டு விழிப்புணர்வு செய்த மகளிர் சுய உதவி குழுவினருடன் செல்பி எடுத்துக் கொண்டார். மேலும் விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கிய ஆட்சியர் வாக்காளர்கள் தங்களது வாக்குககளை தவறாமல் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.