Begin typing your search above and press return to search.
விதிமுறையை மீறி அதிகபாரம் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரிகளுக்கு அபராதம்.
பெரம்பலூர் அருகே விதிமுறையை மீறி அதிகபாரம் ஏற்றிச்சென்ற 5 லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரூ. 3.50 லட்சம் அபராதம் விதித்தனர்.
HIGHLIGHTS
பெரம்பலூர் பகுதிகளில் கனரக லாரிகளில் அதிக பாரம் ஏற்றிச் செல்வதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு புகார் வந்தது. இதையடுத்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் பெரம்பலூர்- அரியலூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக பாரம் ஏற்றிச்சென்ற 5 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 2.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட ஜே.சி.பி வாகனத்துக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.