/* */

புதுச்சத்திரம் அருகே திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைப்பு

புதுச்சத்திரம் அருகே திமுக சார்பில் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நீர், மோர் பந்தலை எம்எல்ஏ ராமலிங்கம் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

புதுச்சத்திரம் அருகே திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைப்பு
X

புதுச்சத்திரம் ஒன்றியம், பாச்சல் பகுதியில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர், மோர் பந்தலை நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் திறந்து வைத்தார்.

புதுச்சத்திரம் அருகே திமுக சார்பில் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நீர், மோர் பந்தலை எம்எல்ஏ ராமலிங்கம் திறந்து வைத்தார்.

நாமக்கல் கிழக்கு மாவட்டம், புதுச்சத்திரம் வடக்கு ஒன்றியம், பாச்சல் கிளை திமுக சார்பில் சார்பில், பொதுமக்களுக்காக, நீர்-மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் தலைமை வகித்து, பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர், மோர் மற்றும் பழங்களை வழங்கினார். புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் கவுதம், புதுச்சத்திரம் ஒன்றிய தலைவர் சாந்தி, துணைத் தலைவர் ராம்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் தரணிபாபு, மாணவரணி அமைப்பாளர் குமார், பாச்சல் கிளை செயலாளர் பெரியசாமி, சக்திவேல், மாரிமுத்து உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 1 April 2022 12:15 PM GMT

Related News