/* */

நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி ஆண்டுவிழா: பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்பு

நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி ஆண்டுவிழா: பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்பு
X

நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி ஆண்டு விழாவில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு மாணவமாணவிகளுக்கு பரிசு வழங்கினார். அருகில் பள்ளி சேர்மன் சரவணன்.

நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியின் 13-ம் ஆண்டு ஆண்டு விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினார்.

நாமக்கல், திருச்சி ரோடு, வேப்பநத்தம் அருகில் நேஷனல் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியின் 13-ம் ஆண்டு விழா, பள்ளி சேர்மன் சரவணன் தலைமையில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் ராஜசுந்தரவேல் வரவேற்றர். மாநில பாஜ தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கடந்த ஆண்டுகளில் ஐ.ஐ.டி மற்றும் எம்பிபிஎஸ் படிப்புகளில் சேர்ந்து படித்து வரும், இப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசியதாவது: கிராமத்து சூழலில் இருந்து வரும் ஒரு குழந்தையிடம் வெற்றியை அடையும் இலக்கு அதிகம் உண்டு. குழந்தைகள் பெற்றோர்களை மதிக்க வேண்டும். பெற்றோர் தங்களுடைய குழந்தைகளின் விருப்பம் அறிந்து செயல்பட வேண்டும். அன்புடனும் மனித நேயத்துடனும் மாணவர்கள் உருவாக்க வேண்டும். பன்முக தன்மை கொண்ட மாணவர்களே எதிர்காலத்திற்கு தேவை என்று கூறினார். மேல்நிலை வகுப்பு முதல்வர் விக்டர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முடிவில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Updated On: 31 March 2022 3:00 AM GMT

Related News