/* */

நாமக்கல்லில் விதவையை கட்டிப்போட்டு நகை கொள்ளை: பெண் உட்பட 5 பேர் கைது

நாமக்கல்லில், விதவையை கட்டிப்போட்டு நகையை கொள்ளை அடித்த வழக்கில், பெண் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் விதவையை கட்டிப்போட்டு  நகை கொள்ளை: பெண் உட்பட 5 பேர் கைது
X

நாமக்கல், சேலம் ரோடு பொதிகைநகர் பகுதியை சேர்ந்தவர் அமுதா (48). தையல் தொழிலாளி. இவரது கணவர் பெரியசாமி இறந்து நிலையில், தனியாக வசித்து வந்தார். கடந்த 17ம் தேதி அமுதாவின் வீட்டிற்கு வந்த மர்மநபர்கள், அவரது கைகளை துப்பட்டாவால் கட்டிப்போட்டு, அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்துக் கொண்டு, அவரை வீட்டில் பூட்டி வைத்து விட்டு சென்று விட்டனர்.

அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அமுதாவின் சத்தம் கேட்டு அவரை மீட்டனர். இதுதொடர்பாக அவர் கொடுத்த புகாரின்பேரில் நாமக்கல் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் சேலம் மாவட்டம் புத்திரகவுண்டம்பாளையத்தை சேர்ந்த அருணாதேவி (35), அதே பகுதியை சேர்ந்த வாத்தியார் என்கிற எத்திராஜ் (40), தினேஷ்குமார் (35), சுக்கம்பட்டியை சேர்ந்த ரமேஷ் (30), சாலமோன் (29) ஆகியோருக்கு இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

நாமக்கல் நல்லிபாளையத்தில் பதுங்கி இருந்த அருணாதேவி உள்ளிட்ட ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 டூ வீலர்கள், ஒரு செல்போன் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட 3 பவுன் நகையை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 Jun 2021 4:14 AM GMT

Related News