நாமக்கல்லில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் வடிகால் அமைத்துக் கொடுக்க ஐகோர்ட் உத்தரவு

நாமக்கல்லில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர்    வடிகால் அமைத்துக் கொடுக்க ஐகோர்ட் உத்தரவு
X

பைல் படம் 

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட காவிரி நகர் பகுதியில் 12 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவுநீர் வடிகால் அமைத்துத்தரவேண்டும் என சென்னை ஐகோர்ட், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, 5வது வார்டில் காவிரி நகர் குடியிருப்புப் பகுதி உள்ளது. காவிரி நகர் 2வது தெருவில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ரோடு தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால்,கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த மழை காரணமாக அந்த தெரு முழுவதும் மழைநீர் தேங்கியது. 2 மாதங்களுக்கு மேலாக மழை நீர் வடியாததால், கழிவு நீராக மாறி பெரும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். மாநகராட்சி மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையொட்டி, அப்பகுதியைச் சேர்ந்த வக்கீல் விமல்குமார் என்பவர், இது குறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அலுவலர்களின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. விசாரணை முடிந்தபிறகு, இவ்வழக்கில் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சுப்ரமணியம் மற்றும் ராஜசேகர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட காவிரி நகர் பகுதியில் உரிய மழை நீர் வடிகால் வசதிகளை அமைக்க வேண்டும். மேலும் ரோடு ஆக்கிரமிப்புகளை அகற்றித் தர வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தீர்ப்பு நகல் பெறப்பட்ட 12 வாரங்களுக்குள் மேற்கண்ட பணிகளை செய்து தர வேண்டும் என நாமக்கல் கலெக்டர், நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் மற்றும் நாமக்கல் தாசில்தாருக்கு இந்த உத்தரவை ஐகோர்ட் வழங்கியுள்ளது.

Next Story
Similar Posts
நவீன வசதிகளுடன் 103 ரெயில் நிலையங்கள் புதுப்பிப்பு – பிரதமர் மோடியின் அதிரடி திறப்பு!
நாமக்கல்லில் குடிபோதையில் அரசு பஸ்  ஓட்டிய டிரைவர் போலீசில் ஒப்படைப்பு
2047ம் ஆண்டில் இந்தியா உலகின் நெ.1 நாடாக திகழும்: மத்திய இணை அமைச்சர் முருகன் பேச்சு
மக்கள் பிரச்சினைகளை மன்றக் கூட்டத்தில் பேசக்கூடாது :    துணை மேயர் எச்சரிக்கையால் பரபரப்பு
குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயது    குழந்தைகளை சேர்த்து பயன்பெறலாம்
கிரஷர், எம்.சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள்    ஒரு வாரத்தில் பதிவு செய்ய வேண்டும்: கலெக்டர்
அனுமதியற்ற தொழிற்சாலைகள் இடிக்கபட்டன - பவானியில் பரபரப்பு!
மருத்துவமனைக்கு பாதுகாப்பு தேவை : மக்கள் கோரிக்கை
தமிழக அளவில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்ட  5 மாவட்டங்களில் நாமக்கல்லும் ஒன்று : கலெக்டர் பகீர் தகவல்
ஈரோட்டில் ஆட்டோ டிரைவர், முதிய பெண்ணிடம் ரூ.1.44 லட்சம் மோசடி – மோசடியின் பெயரால் மனிதநேயம் கேள்விக்குறி!
கால்வாயில் மிதந்த சடலம் - சடலத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி தரும் உண்மை!
ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றிக்கு மரியாதை - நாமக்கலில் பேரணி
பைக் மீது பஸ் மோதிய விபத்தில் தம்பதியர் பலி