நாமக்கல்லில் குடிபோதையில் அரசு பஸ் ஓட்டிய டிரைவர் போலீசில் ஒப்படைப்பு

நாமக்கல்லில் குடிபோதையில் அரசு பஸ்  ஓட்டிய டிரைவர் போலீசில் ஒப்படைப்பு
X

நாமக்கல் அருகே குடிபோதையில், அரசு பஸ் ஓட்டியதாக போலீசாரால் கைது செய்யப்பட்ட டிரைவர் நவீன்ராஜ்.

குடிபோதையில் அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவரை, பயணிகள் பிடித்து, நாமக்கல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

நாமக்கல்,

ஈரோட்டில் இருந்து நாமக்கல் வழியாக துறையூருக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. வழக்கம் போல், நேற்று காலை 9 மணிக்கு, ஈரோட்டில் இருந்து பஸ் புறப்பட்டது. பஸ்சை, நாமக்கல் மாவட்டம், என்.புதுப்பட்டியை சேர்ந்த நவீன்ராஜ் (28) என்பவர் பஸ்சை ஓட்டி வந்தார்.

பஸ்சில், 40க்கும் மேற்பட்ட பயணிகள் உட்கார்ந்து வந்தனர். போதையில் இருந்த டிரைவர் நவீன்ராஜ், பஸ்சை கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறாக ஓட்டி வந்துள்ளார். அதனால், பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். கன்டக்டர் கண்டித்தும், டிரைவர் கண்டு கொள்ளவில்லை. பயணிகளும், உயிரை கையில் பிடித்தபடியே பஸ்சில் பயணம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில், நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் அருகே எர்ணாபுரம் வந்தபோது, டிரைவரை தாக்க பயணிகள் முயன்றனர். அப்போது, சாலை நடுவில் உள்ள சென்டர் மீடியன் மீது பஸ் மோதி நின்றது.

இது குறித்து நல்லிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், டிரைவரை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். இதற்கிடையில், பயணிகளை மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இது தொடர்பாக, தமிழக அரசு போக்குவரத்துக் கழக நாமக்கல் டெப்போ கோட்ட மேலாளர் செங்கோட்டுவேல் விசாரணை செய்து வருகிறார். டிரைவர் நவீன்ராஜ், பணியில் சேர்ந்து, ஒன்னறை ஆண்டுகளே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
Similar Posts
நவீன வசதிகளுடன் 103 ரெயில் நிலையங்கள் புதுப்பிப்பு – பிரதமர் மோடியின் அதிரடி திறப்பு!
நாமக்கல்லில் குடிபோதையில் அரசு பஸ்  ஓட்டிய டிரைவர் போலீசில் ஒப்படைப்பு
2047ம் ஆண்டில் இந்தியா உலகின் நெ.1 நாடாக திகழும்: மத்திய இணை அமைச்சர் முருகன் பேச்சு
மக்கள் பிரச்சினைகளை மன்றக் கூட்டத்தில் பேசக்கூடாது :    துணை மேயர் எச்சரிக்கையால் பரபரப்பு
குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயது    குழந்தைகளை சேர்த்து பயன்பெறலாம்
கிரஷர், எம்.சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள்    ஒரு வாரத்தில் பதிவு செய்ய வேண்டும்: கலெக்டர்
அனுமதியற்ற தொழிற்சாலைகள் இடிக்கபட்டன - பவானியில் பரபரப்பு!
மருத்துவமனைக்கு பாதுகாப்பு தேவை : மக்கள் கோரிக்கை
தமிழக அளவில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்ட  5 மாவட்டங்களில் நாமக்கல்லும் ஒன்று : கலெக்டர் பகீர் தகவல்
ஈரோட்டில் ஆட்டோ டிரைவர், முதிய பெண்ணிடம் ரூ.1.44 லட்சம் மோசடி – மோசடியின் பெயரால் மனிதநேயம் கேள்விக்குறி!
கால்வாயில் மிதந்த சடலம் - சடலத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி தரும் உண்மை!
ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றிக்கு மரியாதை - நாமக்கலில் பேரணி
பைக் மீது பஸ் மோதிய விபத்தில் தம்பதியர் பலி