Begin typing your search above and press return to search.
நாமக்கல்லில் 28ம் தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
நாமக்கல்லில் வருகிற 28ம் தேதி சமையல் கேஸ் நுகர்வேர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
HIGHLIGHTS
இது குறித்து நாமக்கல் டிஆர்ஓ கதிரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் சமையல் கேஸ் நுகர்வோர் நலன் கருதி, அனைத்து சமையல் கேஸ் எண்ணெய் நிறுவன ஏஜெண்டுகள், விநியோகஸ்தர்கள், சமையல் கேஸ் நுகர்வோர் ஆகியோரை இணைத்து, சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது.
மாவட்ட கலெக்டர் ஆபீசில் வருகிற 28ம் தேதி மாலை 3 மணிக்கு, டிஆர்ஓ கதிரேசன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும். சமையல் கேஸ் விநியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர்கள், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்கள் குறைகளை, மனுக்களாக எழுதி இரண்டு பிரதிகள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.