/* */

நாமக்கல்லில் 25ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாமக்கல்லில் 25ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
X

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 25ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

மார்ச் மாதத்திற்கான, நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 25ம் தேதி வெள்ளிக்கிழமை, காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து விவசாயிகளின் குறைகளை கேட்டறிகிறார். இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

Updated On: 21 March 2022 9:30 AM GMT

Related News