Begin typing your search above and press return to search.
நாகையில் வேட்பாளருக்கு குத்தாட்டம் போட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தொண்டர்கள்
நாகை நகராட்சி 31 ஆவது வார்டு அதிமுக வேட்பாளருக்கு மேள கச்சேரி வைத்து குத்தாட்டம் போட்டு தொண்டர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
நாகை நகராட்சியில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி நாகை நகராட்சி 31 ஆவது வார்டில் அதிமுக சார்பாக விஜயலக்ஷ்மிபால்ராஜ் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் இன்று அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக கட்சியினர் தவில், சட்டி மேளம் வைத்து குத்தாட்டம் போட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அதிமுக தொண்டர் ஒருவர் கையில் கொடியை பிடித்துகொண்டு கீழே விழுந்தது கூட தெரியாமல் குத்தாட்டம் போட்டார். அவருக்கு இணையாக அங்கிருந்த வயதான முதியவர் ஒருவர் தனது பங்கிற்கு நடனமாடியதையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.