Begin typing your search above and press return to search.
நாகையில் ரூ.6 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கல்
நாகையில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று வழங்கினார்.
HIGHLIGHTS
நாகையில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று வழங்கினார்.
நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட மாற்று திறனாளி துறை, சமூக பாதுகாப்பு திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட தொழில் மையம், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பாக 6 கோடியே, 68 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.