/* */

நாகையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் மீட்பு

நாகப்பட்டினம் அண்ணாசிலை, புதிய பஸ்ஸ்டாண்ட் பகுதிகளில் தந்தையுடன் பிச்சையெடுத்த 4 வயது சிறுவனை போலீசார் மீட்டனர்

HIGHLIGHTS

நாகையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் மீட்பு
X

நாகப்பட்டினத்தில் தந்தையுடம் பிச்சையெடுத்த 4 வயது சிறுவனை போலீசார் மீட்டனர்

நாகப்பட்டினம் அண்ணாசிலை, புதிய பஸ்ஸ்டாண்ட் பகுதிகளில் 4 வயது சிறுவன் தனது தந்தையுடன் பிச்சை எடுப்பதாக நாகை அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசாரை கண்டவுடன் சிறுவனை அங்கேயே விட்டு தந்தை ஓடிவிட்டார். உடனே போலீசார் அந்த சிறுவனை மீட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அப்போது போலீசார் விசாரணை நடத்திய போது சிறுவனின் சொந்த ஊர் திட்டச்சேரி அருகே பொரக்குடி என்றும் தந்தை ஷாஜகான், தாய் நூர்ஜகான் என்றும் அந்த சிறுவன் கூறினான். மேலும் தாய் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் தந்தையுடன் சேர்ந்து நாகையில் பல்வேறு இடங்களில் பிச்சை எடுப்பதாகவும், அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு இரவு நேரங்களில் தந்தை மது அருந்துவதாகவும் அந்த சிறுவன் கூறினான்.

இதன்பின்னர் போலீசார் அந்த சிறுவனுக்கு தேவையான உணவு, உடைகளை வாங்கி கொடுத்து குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைத்தனர்.

Updated On: 28 Jun 2021 3:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  2. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  3. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  5. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  6. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  7. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  8. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்