நாகப்பட்டினம் மாவட்டத்தின் புதிய போலீஸ் எஸ்பியாக ஜவகர் பதவியேற்பு.
Nagapattinam SP Name-நாகப்பட்டினம் மாவட்டத்தின் புதிய போலீஸ் எஸ்பியாக ஜவகர் பதவியேற்றுக் கொண்டார்..
HIGHLIGHTS
Nagapattinam SP Name-நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஓம்பிரகாஷ் மீனா ராணிப்பேட்டைக்கு மாற்றப்பட்டார் . இதைத்தொடர்ந்து நாகை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ஜி.ஜவகர் நியமிக்கப்பட்டார். இதையடுத்து இன்று அவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்திகளிடம் பேசிய ஜவகர்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாவட்டத்தில் மதுபானம், கஞ்சா, மணல் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து அரசின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு காவல் கண்காணிப்பாளர் ஜவகர் வேண்டுகோள் விடுத்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2