/* */

பயிர்களுக்கு வெள்ள நிவாரணம் கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கக்கோரி, நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பயிர்களுக்கு வெள்ள நிவாரணம் கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
X

 நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர். 

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் இணைந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். விவசாய சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில், நாகை, கீழ்வேளூர், வேதாரணியம், தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயம் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், வெள்ளத்தால் வேலையிழந்த விவசாய தொழிலாளர்களுக்கு 10,000 நிவாரணமாக வழங்க வேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்திற்கும் 5000 நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற தொடர் காத்திருப்பு போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மேற்கொண்டனர்.

Updated On: 6 Jan 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...