பயிர்களுக்கு வெள்ள நிவாரணம் கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கக்கோரி, நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் இணைந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். விவசாய சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில், நாகை, கீழ்வேளூர், வேதாரணியம், தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயம் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், வெள்ளத்தால் வேலையிழந்த விவசாய தொழிலாளர்களுக்கு 10,000 நிவாரணமாக வழங்க வேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்திற்கும் 5000 நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற தொடர் காத்திருப்பு போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மேற்கொண்டனர்.