75 -ஆவது சுதந்திர தினவிழா:மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்
விழாவில், கொரோனா களப்பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
HIGHLIGHTS
நாகையில் நடைபெற்ற 75 -ஆவது சுதந்திர தின விழாவில், கொரோனா களப்பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர் செவிலியர் காவலர்கள் கௌரவிக்கப்பட்டு, 91 பயனாளிகளுக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா நாகப்பட்டினத்தில் கொண்டாடப்பட்டது. மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், ஆட்சியர் அருண் தம்புராஜ் தேசிய கொடியை ஏற்றிவைத்து, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து, சமாதான வெண்புறாவைப் பறக்க விட்ட ஆட்சியர், கொரோனா களப்பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர், செவிலியர், காவலர்கள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட 163 நபர்கள் கௌரவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அதன் பின்னர், 99 பயனாளிகளுக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து நாட்டுப்புற கலைஞர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.