/* */

நாகப்பட்டினம் அருகே சொத்து தகராரில் மகன் கண் முன்னே தாய் வெட்டி கொலை ; தாயை கொன்றவரை கல்லால் அடித்து கொன்ற மகன், இரட்டை கொலையால் பரபரப்பு.

நாகப்பட்டினம் அருகே சொத்து தகராறில் மகன் கண்முன்னே தாய் வெட்டி கொலை செய்யப்பட்டார். தாயை கொன்றவரை மகன் கல்லால் அடித்துக் கொன்றார், இந்த இரட்டை கொலையால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

நாகப்பட்டினம் அருகே சொத்து தகராரில் மகன் கண் முன்னே தாய் வெட்டி கொலை ; தாயை கொன்றவரை கல்லால் அடித்து கொன்ற மகன்,  இரட்டை கொலையால் பரபரப்பு.
X

திட்டச்சேரி காவல் நிலையம் பைல் படம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மருங்கூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரகாளி (வயது 65) இவர் திருப்பயத்தாங்குடி ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் மனைவி தனபாக்கியம் (வயது 52). இவர்களுக்கு பிச்சைமுத்து (வயது 34),சின்னையன் (வயது 31), முத்துப்பாண்டி (வயது 28) என மூன்று மகன்கள் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் பன்றிகள் வளர்த்து வரும் நிலையில், வீரகாளியின் இரண்டாவது அண்ணன் சீனிவாசனுக்கு ரமேஷ் (வயது 42), ராஜூ (வயது 38) என இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகன் ராஜூ தனது வீட்டிற்கு பின்புறம் உள்ள மருங்கூர் காராமணி தெருவைச் சேர்ந்த ஜெயபால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் தனது பன்றிகளை வளர்த்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இடத்தை வீரகாளியின் மூத்த மகன் பிச்சைமுத்து ஜெயபாலிடம் இருந்து பணம் கொடுத்து வாங்கியுள்ளார். இதனால் வீரகாளி, ராஜூ இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபோல் சம்பவத்தன்று மாலையில் ராஜூ வீரகாளிடம் வாய்ச் சண்டையில் ஈடுபட்டு உள்ளார்.

சண்டை அதிகமாகி சண்டையில் கோபமடைந்த ராஜூ மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வீரகாளின் வலது தோள்பட்டையில் வெட்டியுள்ளார்.

அதனை கண்ட வீரகாளியின் மனைவி தனபாக்கியம் அங்கு ஓடிவந்து தடுத்துள்ளார். அப்போது உனது மகன் பிச்சைமுத்து அந்த இடத்தை வாங்குவதற்கு முழு காரணம் நீதான் என கூறி தனபாக்கியத்தின் தலைமுடியை பிடித்து இழுத்துக்கொண்டு போய் அருகிலுள்ள குழாய் அடியில் வைத்து அரிவாளால் கழுத்தில் வெட்டியுள்ளார்.இதில் பலத்த காயமடைந்த தனபாக்கியம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அப்போது அங்கு வந்த வீரகாளியின் மூன்றாவது மகன் முத்துபாண்டி தாய் துடிதுடித்து இறந்தைதை கண்டு கீழே கிடந்த சிமென்ட் கல்லை எடுத்து ராஜூவின் தலையில் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்து நிலைகுலைந்து ராஜூ ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்துள்ளார். அப்போது அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காயமடைந்த வீரகாளி, ராஜூயை மீட்டு 108 ஆம்புலன்சில் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி உள்ளனர்.

மருத்துவமனையில் ராஜூயை பரிசோதித்த மருத்துவர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளார். தோள்பட்டையில் படுகாயம் அடைந்த வீரகாளி தீவிர சிகிச்சையில் உள்ளார்.

சம்பவத்தில் இறந்த தனபாக்கியம், ராஜூ ஆகிய இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு போலீசார் நாகை அரசு தலைமை மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நாகை டி.எஸ்.பி சுப்ரமணியன் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகை அருகே சொத்து தகராறு காரணமாக நடந்த இரட்டை கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 29 Jun 2021 5:34 AM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  6. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  7. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
  9. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  10. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்