தோசையால் நேர்ந்த விபரீதம்- சப்ளையருக்கு அரிவாள் வெட்டு
நாகப்பட்டினத்தில் ஆர்டர் செய்த தோசையை வேறொருவருக்கு வைத்த ஹோட்டல் சப்ளையருக்கு காதில் அரிவாள் வெட்டு விழுந்தது. இருவர் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினத்தை அடுத்துள்ள வெளிப்பாளையம் தேவி திரையரங்கு அருகே ஹோட்டல் வைத்து நடத்தி வருபவர் மோகன். இந்நிலையில் அந்த தியேட்டரில் படம் பார்ப்பதற்கு சென்ற வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த அருண்குமார் மற்றும் சிவா ஆகிய இருவரும் மோகனின் ஹோட்டலில் சாப்பிட வந்துள்ளனர். அப்போது அருண்குமார் தோசை ஆர்டர் செய்ததாகவும், அந்த தோசையை சப்ளையர் வேறு ஒரு டேபிளில் சாப்பிட்டவர்களுக்கு வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த இருவரும் கடை ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே அருண்குமார் மற்றும் சிவா ஆகிய இருவரும் கத்தியை எடுத்து சப்ளையர் பாஸ்கரனை காதில் வெட்டியுள்ளனர். இதனால் காயமடைந்த அவர்கள் நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய வெளிப்பாளையம் போலீசார் மேற்படி இருவரையும் கைது செய்தனர்.