பள்ளிவாசல் குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
நாகப்பட்டினத்தில் உலக புகழ்பெற்ற நாகூர்தர்காவின் அருகே உள்ள பழைமை வாய்ந்த செய்யது பள்ளி வாசல் குளத்தின் சுற்றுச்சுவரின் ஒருபகுதி இடிந்து விழுந்ததால் அருகாமையில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
நாகூர் தர்காவிற்கு அருகே உள்ள செய்யது பள்ளி குளத்தின் சுவர் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழைமை வாய்ந்த ஆண்டிக்குளம் என்றழைக்கப்படும் செய்யது பள்ளியின் குளத்தில் மழைநீர் நிரம்பி வழிந்தது. இந்நிலையில் திடீரென குளத்தின் மேற்கு புற சுவர் பயங்கர சத்தத்துடன் சரிந்து விழுந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அருகே வசிக்கும் குடியிருப்புவாசிகள் அந்த சாலையின் போக்குவரத்தை அடைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூங்கில் தடுப்புகள் கொண்டு அடைத்தனர். எனவே அதிக வாகனங்கள் செல்லக்கூடிய சாலை என்பதால் உடனடியாக குளத்தின் செப்பனிடும் பணியை தொடங்க வேண்டும் என இஸ்லாமியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.