/* */

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பிரச்சார பேரணி

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் இன்று நாகை மாவட்டம் வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் இருந்து தஞ்சை ராஜராஜன் சிலை வரை பிரச்சார பேரணி.

HIGHLIGHTS

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், நெல் குவிண்டாலுக்கு 2500 ரூபாய் வழங்க வலியுறுத்தியும், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் இன்று நாகை மாவட்டம் வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் இருந்து தஞ்சை ராஜராஜன் சிலை வரை பிரச்சார பேரணி சென்றனர். இதற்காக தமிழக காவிரி விவசாயிகள் பொதுச் செயலாளர் பி.ஆர் பாண்டியன் தலைமையில் வேதாரண்யத்தில் இருந்து துவங்கிய பேரணியானது இன்று நாகப்பட்டினம் அவுரித்திடலுக்கு வந்தடைந்தது. அப்போது விவசாயிகள் மத்தியில் பேசிய பிஆர் பாண்டியன், புதிய வேளாண் சட்டத்தை பாராளுமன்றத்தில் கூட்டி விவாதித்து ரத்து செய்ய தமிழக முதல்வர் பிரதமரை வலியுறுத்த வேண்டும் என்றும், வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவில்லை என்றால், தமிழக மக்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை புறக்கணிப்பார்கள் என்றார். மேலும் தமிழக அரசியலை நிர்ணயிக்கிற சக்தியாக விவசாயிகள் உள்ளனர். எனவே தமிழக விவசாயிகளை அழிக்கும் சட்டத்திற்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார். வரும் சட்டமன்ற தேர்தலில் விவசாயிகளின் குரல் ஓங்கி ஒழிக்கும் என்றும், அப்போது பாஜகவின் முகத்திரையை தோலுரித்து காட்டப்படும் என ஆவேசத்துடன் கூறிய பி.ஆர்.பாண்டியன். பாஜகவிற்கு துணை போகும் இயக்கங்களுக்கு எதிராக தேர்தலில் களம் இறங்குவோம் எனவும் சூளுரைத்தார்.

Updated On: 9 Jan 2021 10:54 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  3. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  4. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  6. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  8. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  9. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  10. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...