சோழவந்தான் பிரளயநாத சுவாமி திருக்கோவி லில் ஆவணி மாத குருவார பிரதோஷ விழா
![சோழவந்தான் பிரளயநாத சுவாமி திருக்கோவி லில் ஆவணி மாத குருவார பிரதோஷ விழா சோழவந்தான் பிரளயநாத சுவாமி திருக்கோவி லில் ஆவணி மாத குருவார பிரதோஷ விழா](https://www.nativenews.in/h-upload/2022/09/09/1588794-temple.webp)
பைல் படம்
சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளயநாத சுவாமி திருக்கோவிலில் ஆவணி மாத வளர்பிறை பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளய நாத சுவாமி திருக்கோவிலில் ஆவணி மாத வளர்பிறை பிரதோஷ விழா நடைபெற்றது. நந்தி பகவானுக்கு பால் ,தயிர் ,நெய், வெண்ணெய் உட்பட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது தொடர்ந்து. பிரளய நாத சுவாமி அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் திருக்கோவிலை வலம் வந்தார்கள். பக்தர்கள் நெய்விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தொழிலதிபர் எம் வி எம் மணி முத்தையா, கலைவாணி பள்ளி தாளாளர் ,நகர அரிமா சங்கத் தலைவர் எம் மருது பாண்டியன், பள்ளி நிர்வாகி எம் வள்ளி மயில் ஆகியோர் செய்து இருந்தனர். இதேபோல திருவேடகம் அருள்மிகு ஏடகநாதர் ஏலவார் குழலி அம்மன் ஆலயத்திலும், பேட்டை அருணாச்சல ஈஸ்வரர் ஆலயத்திலும் உட்பட பல்வேறு சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu