/* */

மதுரை அருகே ஆக்கிரமிப்பு அகற்றுவதை எதிர்த்து பெண் தீக்குளிக்க முயற்சி

பூக்கடை நடத்தி வந்த பிரேமலதா மற்றும் அவரது கணவர் மணிகண்டன் ஆகியோர் மேயர் முன்பு தீக்குளிக்க மண்ணெண்ணெய் கேனுடன் வந்தனர்

HIGHLIGHTS

மதுரை அருகே ஆக்கிரமிப்பு அகற்றுவதை எதிர்த்து  பெண் தீக்குளிக்க முயற்சி
X

திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன் கோவில் ஆக்கிரமிப்பு அகற்றுவதினை எதிர்த்து, மதுரை துணை மேயர் கார் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி:

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பங்குன்றம் வெயிலுக்கு உகந்தம்மன் கோவில் உள்ளது .இந்த கோவிலில், மணிகண்டன் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ( 45) ஆகியோர் பூக்கடை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், வெயிலுக்கு உகந்த அம்மன் கோவில் அருகே ஆக்கிரமிப்புகள் உள்ளதாக கூறி, கடை.யை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இதனை எதிர்த்து, மதுரை மாநகராட்சி திருப்பரங்குன்றம் மண்டலம் 5 -ல் மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் நாகராசன், மண்டல தலைவர் கவிதா விமல் தலைமையில் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பூக்கடை நடத்தி வந்த பிரேமலதா மற்றும் அவரது கணவர் மணிகண்டன் ஆகியோர் மேயர் முன்பு தீக்குளிக்க வந்தனர்.

இதனையடுத்து,சம்பவ இடத்திற்கு அருகிலிருந்த திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் சுந்தரி தலைமையில் போலீசார் மண்ணெண்ணய் கேனை கைப்பற்றி, அவரை தீக்குளிக்க முயற்சியில் இருந்து தடுத்தனர்.இதனைத் தொடர்ந்து, மதுரை மாநகராட்சி அதிகாரிகள் பிரேமலதா மற்றும் அவரது கணவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து துணை மேயர் கார் முன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 31 May 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வளையோசை கலகலவென ஓசை கேட்கும் வளைகாப்பு நிகழ்ச்சி..!
  2. தமிழ்நாடு
    புருவம் வழியாக மூளைக் கட்டிக்கான உலகின் முதல் கீஹோல் அறுவை சிகிச்சை:...
  3. அரசியல்
    காங்கிரஸ் சரிவுக்கு காரணம் அறியாமை, சோம்பேறித்தனம், ஆணவம்: சொல்கிறார்...
  4. லைஃப்ஸ்டைல்
    கண்டவுடன் கேட்கும் முதல் கேள்வி, "சாப்பிட்டியாப்பா"..? அம்மா..!
  5. தென்காசி
    ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
  6. தென்காசி
    பட்டுப்புழு கூடு உற்பத்தி பாதிப்பு; நிவாரணம் வழங்க விவசாயிகள்
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்துறை பணிகளை திடீர் ஆய்வு செய்த ஆட்சியர்
  8. தொண்டாமுத்தூர்
    கோவை தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து நகை பணம் கொள்ளை
  9. உலகம்
    5 நிமிடங்களில் 6,000 அடி இறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ...
  10. கோவை மாநகர்
    கோவையில் தொடர் கனமழை ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு