Begin typing your search above and press return to search.
கேஆர்பி அணைக்கு நீர்வரத்து 383 கன அடியாக அதிகரிப்பு
தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடரும் மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது
HIGHLIGHTS
தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் நீர்வரத்து வினாடிக்கு நேற்று 75 கனஅடியாக இருந்த நிலையில் இன்று 383 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 46 அடியாக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து, அணையின் வலது மற்றும் இடதுபுற பாசன கால்வாய் மூலம் அணைக்கு வரும் நீரில் 177 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.