/* */

கிருஷ்ணகிரி பகுதியில் இடி, மின்னலுடன் இரவில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதியில் இடி, மின்னலுடன் பெய்த மழையால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி பகுதியில் இடி, மின்னலுடன் இரவில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
X

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெப்பச்சலனத்தால் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. பருவ மழை ஆரம்பித்தும், தமிழகத்தில் மிதமான மழையே பெய்து வந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பர்கூர், மத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கிருஷ்ணகிரியில் நேற்று மாலையில் இருந்து கனமழையாக பெய்ய துவங்கிது; இரவிலும் இடி, மின்னலுடன் மழை நீடித்தது.

இந்த மழையால், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே மழை நீரும் தேங்கியிருந்தது. நிதானமான பெய்த இந்த மழையால், வெப்பம் குறைந்து குளிர்காற்று வீசியது. தற்போதைய மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை காரணமாக, கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஒரு சில பகுதிகளில், மின்சாரம் தடைப்பட்டது.

Updated On: 2 July 2021 4:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?