/* */

கிருஷ்ணகிரியில் கள்ளநோட்டு புழக்கத்தில் விட்ட 3 பேர் கைது - ரூ.48 ஆயிரம் கள்ளநோட்டு பறிமுதல்!

கிருஷ்ணகிரியில், கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட முயன்ற 3 பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.48 ஆயிரம் மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் வெள்ளிச்சந்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி முத்தையா (45). கிருஷ்ணகிரி மாவட்டம் பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் முருகன் என்பவரது மனைவி ஜோதி (40). இவர் தனது கணவர் உயிரிழந்த நிலையில், அரசு பள்ளி சத்துணவு உதவியாளராக உள்ளார். இருவரும் டூவீலரில் கிருஷ்ணகிரிக்கு சென்றனர்.

அங்கு, புதுப்பேட்டை பாரதிநகரைச் சேர்ந்த வேலு (57) என்பவரிடம், முத்தையா, ஜோதி இருவரும், கருவாடு வாங்கினர். அதறு 200 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளனர். கள்ள நோட்டு போல் தெரிந்ததால், சந்தேகமடைந்த வேலு, அவ்வழியே ரோந்து சென்ற தலைமை காவலர் முருகன் என்பவரிடம் தெரிவித்தார். இதையடுத்து முத்தையா, ஜோதி இருவரையும் பிடித்து, போலீசார் விசாரணை நடத்தினர்.

இருவரும், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே எர்ரகாடு பகுதியை சேர்ந்த பூசாரி முருகன்(47) என்பவரிடம் இந்த நோட்டை பெற்றதாக கூறினர். இதையடுத்து, பென்னாகரம் சென்ற போலீசார், முருகன் வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு 2 கலர் பிரிண்டர், நகல் எடுத்து வைக்கப்பட்டிருந்த 500 ரூபாய் நோட்டுக்கள் 20, 200 ரூபாய் நோட்டுகள் 57, நூறு ரூபாய் நோட்டுகள் 270 என மொத்தம் ரூ.48 ஆயிரத்து 400 மதிப்புள்ள கள்ள நோட்டுகள், ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட முயன்ற முத்தையா, ஜோதி, முருகன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.

#கிருஷ்ணகிரி #தமிழநாடு #கிருஷ்ணகிரி #police #arrested #3people #counterfeit #notes #circulation #கள்ளநோட்டுகள் #புழக்கம் #கைது #blackmoney

Updated On: 10 Jun 2021 6:53 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  2. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  3. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  4. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  5. வந்தவாசி
    மது போதையில் ரகளை செய்த மகன்; கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய ‘ பாசக்கார’...
  6. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  7. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  8. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  10. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...