வாக்களிக்க 5000,10000 ரூபாய் கேளுங்கள்-சீமான்
வாக்குக்கு பணம் கொடுக்க வந்தால் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை கேளுங்கள் என கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் சீமான் பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பரப்புரை செய்தார். முன்னதாக கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் நிரந்தரியை ஆதரித்து பரப்புரை செய்த சீமான், தற்போதைய கட்சிகள் அரசியலை லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றியுள்ளனர். இதனை நாங்கள் மாற்ற நினைக்கிறோம். நாட்டில் சரியான சமமான கல்வியை கொடுக்க வேண்டும்.ஜெயலலிதா கடந்த காலத்தில் அதானிக்கு 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விவசாயிகளிடமிருந்து பறித்து கொடுத்தார்.
நாங்கள் வாக்குக்கு பணம் தர மாட்டோம். எங்களிடம் கொடுப்பதற்கு பணம் இல்லை. பணம் இருந்தாலும் வாக்குக்கு பணம் கொடுக்கும் வழக்கத்தை நாங்கள் ஏற்படுத்த மாட்டோம். யாரேனும் வாக்குக்கு பணம் கொடுக்க வந்தால் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை கேளுங்கள் அப்போது தான் வாக்களிப்போம் எனவும் அவர்களிடம் கூறுங்கள் என பேசினார்.