/* */

வைகாசி பெருவிழா ரத்து

கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில்

HIGHLIGHTS

வைகாசி பெருவிழா ரத்து
X

கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில் கம்பம் விடும் திருவிழா என அழைக்கப்படும் வைகாசி பெருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது.

கரூர் நகரில் உள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் வருடம் தோறும் வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெறும் இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்.

கரூர் மாவட்டம் மட்டுமல்லாது, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழிபடுவது வழக்கம்.

கொரோனா பரவல் காரணத்தால் நிகழாண்டில. திருவிழா நடைபெறாது எனவும் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வருகை தருவதை தவிர்க்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தங்களின் வீடுகளிலேயே மஞ்சள், நீர் வைத்த கும்பத்தில் வேப்பிலை,இளநீர், மாவிளக்கு,தேங்காய், பழங்களை வைத்து வழிபாட்டினை செய்து கொள்ள வேண்டுமென கோவில் நிர்வாக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 9 May 2021 11:45 AM GMT

Related News