கரூரில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி அதிரடி பேட்டி
கரூரில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி பேட்டி அளித்தார்.
HIGHLIGHTS
கரூரில் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஆற்று மணல் அள்ள படவில்லை அதற்கு மாற்றாக எம்.சாண்ட், பி.சாண்ட் பயன்படுத்த துவங்கிவிட்டனர்.,
அதனால் ஆறுகளில் அள்ளப்படும் மணல் களை மறந்து விட்டனர் பொதுமக்கள் ஆனால் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது புதிதாக அமைந்துள்ள தற்போதைய திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு ஆற்று மணலை அள்ளி யூனிட் ஒன்றுக்கு ரூபாய்.1000 என நிர்ணயம் செய்து விற்பதற்கு முடிவு செய்துள்ள நிலையில் இது தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் ஒரு செயல்.
ஏற்கனவே ஆற்று மணல் அள்ள பட்டுள்ள நிலையில் தற்பொழுது குறைந்தளவிலான மணல் உள்ளது இதையும் அள்ளினால் நிலத்தடி நீர் மட்டம் செரி ஊட்டுவது வெகுவாக குறைந்து போகும். ஆற்று நீரை தூய்மைப்படுத்துவது மணல்தான் இந்த அரசு மணல் அள்ளுவதற்கு அறிவித்த இந்த அறிவிப்பை தற்போதைய திமுக அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பை சந்திக்கக்கூடும் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.