Begin typing your search above and press return to search.
கரூரில் அரசியல் கட்சி பிரமுகர்கள் போஸ்டர், சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி தீவிரம்
கரூரில் தேர்தலையொட்டி அரசியல் கட்சி பிரமுகர்களின் போஸ்டர்கள், சுவர் விளம்பரங்களை தேர்தல் ஆணையம் அழிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
HIGHLIGHTS
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று தமிழக அளவில் ஒரே கட்டமாக நடத்த தேர்தல் தேதிஅறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகள் மட்டுமில்லாது, கரூர் நகராட்சி தற்போது தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து முதன்முதலில் மாநகராட்சி தேர்தலை சந்திக்கின்றது. கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் கரூர் கோவை சாலை பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள அரசியல் விளம்பர போஸ்டர்கள் மற்றும் சுவர் விளம்பரம் உள்ளிட்டவைகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.