/* */

குமரியில் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டம்

ஹரியும் சிவனும் ஒன்று என்பதை எடுத்துரைக்கும் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டம்.

HIGHLIGHTS

குமரியில் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டம்
X

ஹரியும், சிவனும் ஒன்று என்பதை விளக்கும் வகையில் சிவாலய ஓட்டம் நடைபெறுகிறது. மனித தலையும், புலி உடலும் கொண்ட புருஷா மிருகம், சிவன் மீது அன்பு நிறைந்தது.

சிவனைத் தவிர வேறு இறைவனை ஏற்கமாட்டேன் என புருஷாமிருகம், பிடிவாதமாக இருந்தது. ஹரியும், ஹரனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்த பகவான் கிருஷ்ணன் விரும்பினார். பீமனிடம் 12 ருத்ராட்சங்களை கொடுத்து கோவிந்த நாமத்தை உச்சரித்தபடி சென்று புருஷா மிருகத்திடம் பால் கேட்குமாறும், கோவிந்த நாமத்தை கேட்டதும் புருஷா மிருகம் தாக்க வரும்.

அப்போது ஒவ்வொரு ருத்ராட்சமாக கீழே போடு, அது லிங்கமாக மாறும். சிவபக்தரான புருஷாமிருகம் அதை வழிபாடு செய்து தான் அங்கிருந்து விலகும். இவ்வாறு 11 ருத்ராட்சம் முடிந்து 12வது ருத்ராட்சம் விழும் இடத்தில் நானும் சிவனும் இணைந்து காட்சியளிப்போம் என்று கூறினார்.

பீமனம் அவ்வாறே செய்தான். ருத்ராட்சம் விழுந்த இடங்களில் சிவாலயங்கள் உருவாகின. கடைசி ருத்ராட்சம் விழுந்த இடமான திருநட்டாலத்தில் ஹரியும் ஹரனும் இணைந்த சங்கர நாராயணராக மகாவிஷ்ணு காட்சி தந்து சிவனும் விஷ்ணுவும் ஒன்றே என உணர்த்தினார். இச்சம்பவம் நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களுக்கும் பக்தர்கள் ஓடி சென்று வழிபாடு நடத்துவார்கள், சிவனும் விஷ்ணுவும் ஒன்று அகந்தை கூடாது என்பதை உணர்த்தும் விதத்தில் இந்த சிவாலய ஓட்டம் நடைபெறுகிறது.

Updated On: 10 March 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்