/* */

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 16 மீனவர்களின் நிலை என்ன?-கிராமங்களில் சோகம்

குமரியில் இருந்து கடலுக்கு மீன் சென்ற 16 மீனவர்களின் நிலை 27 நாட்கள் ஆகியும் தெரியாததால் மீனவ கிராமங்களில் சோகம்.

HIGHLIGHTS

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 16 மீனவர்களின் நிலை என்ன?-கிராமங்களில் சோகம்
X

கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி சுனாமி காலனியை சேர்ந்த ஜார்ஜ் திலகன் உட்பட கன்னியாகுமரி குளச்சல் பகுதியை சேர்ந்த 12 மீனவர்கள் மற்றும் மேற்கு வங்காளம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் என மொத்தம் 16 மீனவர்கள் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வேப்பூர் பகுதியிலிருந்து கடந்த மே 5 ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

பொதுவாக ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுவிட்டு 15 நாட்களுக்குள்ளாக மீனவர்கள் திரும்பி வருவது வழக்கம், ஆனால் தற்போது 27 நாட்கள் ஆகியும் மீனவர்கள் திரும்பி வரவில்லை, இதனிடையே இந்த 27 நாட்களில் தவ் தே புயல் மற்றும் யாஸ் புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கரை திரும்பிய நிலையில் அந்த மீனவர்கள் யாரும் 16 மீனவர்களையோ அவர்கள் சென்ற படகையோ பார்க்கவில்லை என கூறுவதால் 16 மீனவர்கள் கதி என்ன என்பது தெரியாத நிலையில் கன்னியாகுமரி மற்றும் குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவ கிராமங்கள் சோகத்தில் மூழ்கி உள்ளன.

இதனிடையே மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஹெலிகாப்டர் அல்லது கடலோர காவல் படை மூலமாக மீனவர்களை மீட்டு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 31 May 2021 8:06 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  2. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  3. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  6. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  8. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  9. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  10. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!