/* */

குமரியில் படகுகள் இயக்கம் நிறுத்தம் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

குமரியில், விடுமுறை நாளில் சுற்றுலா படகுகள் இயக்கம் நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

HIGHLIGHTS

குமரியில் படகுகள் இயக்கம் நிறுத்தம் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
X

குமரியில், படகு சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். 

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு, தினமும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அங்கு அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு பாறை, திருவள்ளுவர் சிலை மற்றும் இயற்க்கை காட்சிகளை கண்டு ரசிப்பது வழக்கம். சபரிமலை சீசன் மற்றும் கோடை விடுமுறை உள்ளிட்ட சீசன் காலங்களில் குமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் இருக்கும்.

கொரோனா ஊரடங்கு காரணமாக, சில மாதங்களாக கன்னியாகுமரியில் சுற்றுலா சொகுசு படகுகள் இயக்கம் ரத்து செய்யப்பட்டு இருந்தது. இதனிடையே கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அளிக்கப்பட்ட தளர்வுகள்படி, கடந்த 1ஆம் தேதி முதல் குமரியில் மீண்டும் சுற்றுலா சொகுசு படகு இயக்கம் தொடங்கியது.

வெறிச்சோடி காணப்பட்ட கன்னியாகுமரி சுற்றுலா தலங்கள், மீண்டும் களைகட்டத் தொடங்கியது, அதேவேளையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில், வாரம்தோறும் சனி ஞாயிறு ஆகிய இரு தினங்களில் சுற்றுலா படகுகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாளில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா படகுகளில் செல்வதற்காக கன்னியாகுமரிக்கு வரும் நிலையில் படகு இயக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். ஊரடங்கு புதிய நெறிமுறைகளின்படி பேருந்துகள், இரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து செயல்படும் நிலையில் சுற்றுலா படகுகளையும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுலாப் பயணிகளை கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 20 Sep 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  4. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  5. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  6. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  9. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  10. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!